தமிழ்நாடு செய்திகள்

சென்னை விமான நிலையம் 2 மணி நேரம் மூடல்

Published On 2024-10-01 08:21 IST   |   Update On 2024-10-01 08:47:00 IST
  • இந்திய விமானப்படையின் விமானப்படை தின விமான கண்காட்சி தாம்பரம் மற்றும் மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது.
  • விமான நிலைய வான்தடம் 15 நிமிடங்கள் முதல் 2 மணிநேரம் வரை பல்வேறு இடைவெளிகளில் மூடப்படும்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகத்தின் சார்பில் இந்திய விமானப்படை வான் சாகச நிகழ்ச்சி காரணமாக விமான பயணிகளுக்கு முன்னறிவிப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்திய விமானப்படையின் விமானப்படை தின விமான கண்காட்சி தாம்பரம் மற்றும் மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 8-ந் தேதி வரை சென்னை சர்வதேச விமான பயண அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி விமான நிலைய வான்தடம் 15 நிமிடங்கள் முதல் 2 மணிநேரம் வரை பல்வேறு இடைவெளிகளில் மூடப்படும் விரிவான அட்டவணையை பகிர்ந்துள்ளது. இன்று பகல் 1.45 மணி முதல் மாலை 3.15 வரை மூடப்படும். நாளை காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், 3-ந் தேதி காலை 10.45 மணி முதல் காலை 11 மணி வரையிலும், 4-ந் தேதி காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், 5-ந் தேதி பகல் 2 மணியில் இருந்து மாலை 3 மணி வரையிலும், 6-ந் தேதி காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் காலை 10.45 மணி முதல் 11 மணி வரையிலும் விமான ஓடுபாதை மூடப்படும். இந்த மாற்றங்களுக்கு பயணிகளின் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News