தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
- 22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யகூடும்.
- சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
இந்தநிலையில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 19-ந் தேதி (இன்று) முதல் 21-ந் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யகூடும்.
22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யகூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
19-ந் தேதி (இன்று) மத்திய வங்க கடலின் மத்திய பகுதியிலும், 20-ந் தேதி (நாளை) மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளிலும் 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.