தமிழ்நாடு
காவிரி மேலாண்மை ஆணையம் நாளை கூடுகிறது: தலைவர் ஹல்தர் அழைப்பு
- கர்நாடகா வினாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க பரிந்துரைக்கப்பட்டது
- 10 நாட்களாக 3 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது
தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே காவிரி நதி நீர் பங்கீடு குறித்து நீண்டகாலமாக சிக்கல் நீடித்து வருகிறது.
கடந்த மாதம் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா, வினாடிக்கு 3000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக 3 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.
இக்கூட்டத்திற்கு ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் அழைப்பு விடுத்திருக்கிறார்.