தமிழ்நாடு செய்திகள்

போலி சான்றிதழ் கொடுத்து 37 ஆண்டுகளாக பணியில் இருந்த அதிகாரி மீது வழக்கு

Published On 2022-12-20 09:42 IST   |   Update On 2022-12-20 09:42:00 IST
  • பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்தார்.
  • குற்றப்பிரிவு போலீசார் பத்மநாபன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மாதாநகரைச் சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 60). இவர் 1985ம் ஆண்டு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக சேர்ந்தார். அதன் பின்னர் பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி ஓய்வு பெற்றார். அப்போது பணி ஓய்வுக்கான பணப்பலன்கள் அளிக்க சான்றிதழ், பதவி உயர்வு உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்தனர். அப்போது பத்மநாபன் தனது பதவி உயர்வுக்காக அளித்த 10ம் வகுப்பு கல்விச்சான்றிதழ் போலி என தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து அவரது பணி ஓய்வை நிறுத்தி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வராணி, திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் பத்மநாபன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News