கார் தீ பிடித்து எரிவதை காணலாம்.
செஞ்சி அருகே பட்டாசு விபத்தில் கார் எரிந்து நாசம்
- சுதாகர் தனது காரை வீட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு வீட்டில் தீபாவளி கொண்டாடினார்.
- தீபாவளி என்பதால் பட்டாசு ஏதாவது பட்டு தீப்பிடித்ததா? அல்லது காரினுள் கோளாறு ஏற்பட்டு தீப்பிடித்ததா? என்பது குறித்து தெரியவில்லை.
செஞ்சி:
செஞ்சி அருகே உள்ள பரதன்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 25). இவர் தனக்கு சொந்தமாக சைலோ கார் வாடகைக்கு ஓட்டி வருகிறார். நேற்று தீபாவளி அன்று தனது காரை வீட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு வீட்டில் தீபாவளி கொண்டாடினார்.
அப்போது கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இது குறித்து உடனடியாக செஞ்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் செஞ்சி தீயணைப்பு அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், சசுபதி ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
எனினும் கார் முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்தது. தீபாவளி என்பதால் பட்டாசு ஏதாவது பட்டு தீப்பிடித்ததா? அல்லது காரினுள் கோளாறு ஏற்பட்டு தீப்பிடித்ததா? என்பது குறித்து தெரியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
சம்பவம் நடந்தபோது அந்த வழியாக சென்ற சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு தீயை அணைப்பதற்கான ஏற்பாடுகளை முடுக்கிவிட்டனர்.