தமிழ்நாடு

திமுகவும், காங்கிரசும் தமிழ்க் கலாச்சாரத்தை கலங்கடிக்கிறார்கள்- பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

Published On 2024-04-07 12:00 GMT   |   Update On 2024-04-07 12:00 GMT
  • பாஜகவின் 10 ஆண்டு ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது.
  • ராதிகா சரத்குமாரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

மதுரை திருமங்கலத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரசாரம் மேற்கொண்டார். விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பாஜகவின் 10 ஆண்டு ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது.

ராதிகா சரத்குமாரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். நாடு அனைத்து துறைகளில் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.

பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு நாடு வந்ததற்கு பிரதமரின் தலைமை பண்பே காரணம்.

ராதிகா சரத்குமாரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

பிரதமர் மோடி தமிழராகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில், கையில் செங்கோலுடன் பிரதமர் மோடி சென்றார்.

திமுகவும், காங்கிரஸூம் தமிழ்க் கலாச்சாரத்தை கலங்கடிக்கிறார்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News