தமிழ்நாடு

தீபாவளி விடுமுறை முடிந்து வந்த தொழிலாளர்களால் திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் இயல்பு நிலைக்கு திரும்பின

Published On 2023-11-20 06:08 GMT   |   Update On 2023-11-20 06:08 GMT
  • கைவசம் உள்ள உள்ளூர் தொழிலாளர் மற்றும் வடமாநில தொழிலாளரை கொண்டு கடந்த வாரம் முழுவதும் பணிகளை செய்தனர்.
  • ஜாப் ஒர்க் நிறுவனங்களும் தங்கள் இயக்கத்தை தொடங்கும் என பின்னலாடை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

திருப்பூர்:

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உட்பட 6 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை தங்கள் சொந்த ஊரில் கொண்டாடுவதையே வெளி மாவட்ட மக்கள் விரும்புகின்றனர்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு கடந்த 10-ந்தேதியே புறப்பட்டு சென்றனர். பின்னலாடை நிறுவனங்களில் வழக்கம் போல் அவசரகதியில் முடிக்க வேண்டிய ஆர்டர்கள் இந்த முறை இல்லை. இயக்கம் சீராக இருப்பதால் நிறுவனங்களும் தாராளமாக 10 நாட்கள் வரை விடுமுறை அளித்தன. வடமாநில தொழிலாளர்களும் சொந்த ஊர் சென்றனர்.

நிர்வாகம் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஏற்கனவே பணிக்கு வந்த நிலையில், கைவசம் உள்ள உள்ளூர் தொழிலாளர் மற்றும் வடமாநில தொழிலாளரை கொண்டு கடந்த வாரம் முழுவதும் பணிகளை செய்தனர்.

விடுமுறையில் சென்ற தொழிலாளர்கள் பலர் இன்று திருப்பூர் திரும்பியுள்ளதால் பின்னலாடை நிறுவனங்கள் இயல்பான இயக்கத்தை தொடங்கி உள்ளன. ஜாப் ஒர்க் நிறுவனங்களும் தங்கள் இயக்கத்தை தொடங்கும் என பின்னலாடை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.மேலும் தொழிலாளர்கள் திரும்பிவிட்டதால் இன்று முதல் அனைத்து கடைகளும் விடுமுறை முடிந்து பரபரப்பான இயக்கத்தை தொடங்கின.

Tags:    

Similar News