தமிழ்நாடு

அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" நடைபயணம் ரத்து

Published On 2023-10-19 16:34 GMT   |   Update On 2023-10-19 16:34 GMT
  • பக்தர்கள் ஏராளமானோர் கண்ணரீ அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
  • மு.க.ஸ்டலின் நாளை நேரில் அஞ்சலி செலுத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

உடல்நலக் குறைவால் உயிரிழந்த பங்காரு அடிகளார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும், மு.க.ஸ்டலின் நாளை நேரில் அஞ்சலி செலுத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த பங்காரு அடிகளாரின் உடலுக்கு பக்தர்கள் ஏராளமானோர் கண்ணரீ அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து, மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" நாளை நடைபெறவிருந்த நடைப்பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News