தமிழ்நாடு செய்திகள்

பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? கோவையில் ஜி.கே.வாசன் பேட்டி

Published On 2024-02-04 14:01 IST   |   Update On 2024-02-04 14:01:00 IST
  • தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பா.ஜ.க.வில் குறிப்பிட்ட இடங்களை கேட்டதாக வந்த தகவல்கள் முற்றிலும் தவறானது.
  • கட்சியை ஆரம்பிப்பதற்கு எந்த துறையில் இருந்து வேண்டு மானாலும் வரலாம்.

கோவை:

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பாராளுமன்ற கூட்டத் தொடர் நாளை காலை இருப்பதால் கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறேன். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இந்த மாதம் 12-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், செயற் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் இயக்கத்தின் பணிகள், தேர்தல் வியூகம், கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது.

செயற்குழு கூட்டத்திற்கு பின்பு உறுப்பினர்களின் ஆலோசனைகளை கேட்டு தேர்தல் சம்பந்தமான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக கட்சியிலிருந்து வெளிவரும்.

கட்சியின் தலைவர் என்ற காரணத்தினால் என்னுடைய கட்சியின் இறுதி முடிவை என்னால் கூட சொல்ல முடியாது. செயற்குழு உறுப்பினர்கள் மூத்த உறுப்பினர்கள் எல்லாம் கருத்துக்களை கூறிய பிறகு தான் முடிவு களை கூற முடியும். மற்ற கட்சிகளுக்காக நான் பேசுவதற்கு எந்த தேவையும் இல்லை, அவசியமும் இல்லை. அந்த அதிகாரமும் இல்லை.

பாரதிய ஜனதா தலைவர்களை பாராளுமன்றத்தில் பார்ப்பதெல்லாம் வழக்கமான ஒன்றாகவே இருக்கி றது. அது புதிதல்ல. தேர்தல் குறித்து பேசுகின்ற நேரம், காலம் இருக்கின்ற போது அதைப் பற்றி பேச தானே செய்வோம்.

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பா.ஜ.க.வில் குறிப்பிட்ட இடங்களை கேட்டதாக வந்த தகவல்கள் முற்றிலும் தவறானது.

நடிகர் விஜய் தொடங்கியுள்ள புதிய கட்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கட்சியை ஆரம்பிப்பதற்கு எந்த துறையில் இருந்து வேண்டு மானாலும் வரலாம். அத ற்கு ஜனநாயகத்தில் எந்த தடையும் இல்லை, தடங்கலும் கிடையாது அதே நேரத்தில் ஜனநாயகத்தில் வாக்காளர்கள் தான் எஜமானர்கள். அவர்களது முடிவு தான் இறுதி முடிவு. மேலும் வாக்காளர்களின் எண்ணம் போல் செயல்பட்டால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News