தமிழ்நாடு

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு- புதிய அமைப்பை தொடங்கினார் ஓ.பி.எஸ்

Published On 2024-03-03 09:56 GMT   |   Update On 2024-03-03 09:56 GMT
  • அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் அறிக்கை வெளியீடு.
  • குழுவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளாக நியமனம்.

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் புதிய அமைப்பை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்துள்ளார்.

இதில், மாநிலத் தலைவர், மாநிலப் பொறுப்பாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் பதவிகளுக்கு நியமனங்கள் மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பான அறிக்கையில், "அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் குழுவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுவதாக" குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News