தமிழ்நாடு

கிராம மக்களின் 32 ஆண்டு போராட்டத்துக்கு பிறகு பட்டா வழங்க உத்தரவு- அளவீடு செய்யும் பணி தொடக்கம்

Published On 2023-05-15 08:24 GMT   |   Update On 2023-05-15 08:24 GMT
  • அனல்மின் நிலைய விரிவாக்க பணிக்காக அருகில் உள்ள கிராமங்களில் வசித்த 531 குடும்பத்தினர் தங்களது இடங்களை வழங்கினர்.
  • கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் பட்டா வழங்க தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட கலெக்டர் ஆல் பி ஜான் வர்க்கீசிடம் மனு அளித்தனர்.

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் கடந்த 32 வருடங்களுக்கு முன்னர் வட சென்னை அனல்மின் நிலைய விரிவாக்க பணிக்காக அருகில் உள்ள கிராமங்களில் வசித்த 531 குடும்பத்தி னர் தங்களது இடங்களை வழங்கினர். அவர்களுக்கு அருகில் மாற்று இடம் வழங்கப்பட்டது. ஆனால் நிலம் உரிமையாக்க பட்டா வழங்கப்படவில்லை.

இதையடுத்து தங்களது நிலத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் பல கட்ட போராட் டங்கள் நடத்தினர். ஊராட்சி மன்றம், வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தனர். எனினும் அவர்களுக்கு நிலப்பட்டா வழங்கப்படவில்லை. இதனால் கிராமமக்களின் போராட்டம் கடந்த 32 ஆண்டுகளாக நீடித்து வந்தது.

இதற்கிடையே சமீபத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் பட்டா வழங்க தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட கலெக்டர் ஆல் பி ஜான் வர்க்கீசிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யாவிடம் கலெக்டர் உத்தரவிட்டார். சம்பந்தப்பட்ட இடத்திற்கு சார் ஆட்சியர் ஐஸ்வர்யா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து வடசென்னை அனல் மின்நிலைய விரிவாக்க பணிக்காக நிலம் வழங்கி மாற்று இடத்தில் வசிக்கும் 531 குடும்பத்தினருக்கு பட்டா வழங்க கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். இதற்காக வருவாய்துறை அதிகாரிகள், ஊராட்சி தலைவர் சுகந்தி வடிவில், துணைத் தலைவர்கதிர்வேல் முன்னிலையில் தற்போது வீடுகளை அளவிடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, இப்பகுதியில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் பட்டா வழங்க அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது. இது இரண்டு மாதத்திற்குள் முடிக்கப்படும். விரைவில் வடசென்னை அனல் மின் நிலைய விரிவாக்கபணிக்கு இடம் வழங்கிய கிராம மக்களுக்கு பட்டா வழங்கப்படும் என்றார்.

Tags:    

Similar News