தமிழ்நாடு

தொப்பூர் கணவாய் அருகே ராட்சத இரும்பு உருளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

Published On 2023-08-27 07:28 GMT   |   Update On 2023-08-27 07:28 GMT
  • தொடர்ந்து இந்த வாகனத்தின் பின்னால் வந்த கண்டெய்னர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது.
  • விபத்தில் ராட்சத இரும்பு உருளையை ஏற்றி வந்த லாரியின் ஓட்டுனர் படுகாயம் அடைந்தார்.

தொப்பூர்:

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ராட்சத இரும்பு உருளையை ஏற்றி சென்று லாரி தருமபுரி மாவட்டம், பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் பகுதியில் இன்று காலை வந்து கொண்டிருந்தது.

அப்போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்து லாரி தலைகுப்புற கவிழ்ந்ததில் ராட்சத உருளையும் சாலை ஓரம் கவிழ்ந்தது.

இதை தொடர்ந்து இந்த வாகனத்தின் பின்னால் வந்த கண்டெய்னர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ராட்சத இரும்பு உருளையை ஏற்றி வந்த லாரியின் ஓட்டுனர் படுகாயம் அடைந்தார்.

வாகன இடிபாடுகளில் சிக்கியவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்தவிபத்தால் பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் மற்றும் சாலை பராமரிப்பு குழுவினர் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

Tags:    

Similar News