தமிழ்நாடு

உடன்குடியில் பிடிபட்ட அரிய வகை ஆந்தை வனத்துறையிடம் ஒப்படைப்பு

Published On 2024-01-27 06:13 GMT   |   Update On 2024-01-27 06:13 GMT
  • காகா கூட்டம் ஆந்தையை கொத்தி கொல்ல முயன்றது.
  • உடனடியாக வனத்துறையினரை அரியவகை ஆந்தையை பிடித்து சென்றனர்.

உடன்குடி:

உடன்குடி சிவலுரில் விஜயன் என்பவரது வீட்டுக்கு கூரையில் நேற்று ஒரு அரியவகை ஆந்தை சிக்கி கிடந்தது.

இதைப் பார்த்த காகா கூட்டம் அதனை கொத்தி கொல்ல முயன்றது. இதைப்பார்த்த விஜயன் காக்கையிடம் இருந்து காப்பாற்றி சாதுர்யமாக ஆந்தையை பிடித்தார்.

இவரது அண்ணன் ஆசிரியர் ஜெயராஜ் வீடியோ மற்றும் போட்டோ எடுத்து வாட்ஸ் அப் வீடியோ மூலம் அது வைரலானது. உடனடியாக நாசரேத் அருகில் உள்ள கச்சினா விலை வனத்துறை அலுவலர் கனிமொழி இதை பார்வையிட்டு உடனடியாக வனத்துறையினரை அனுப்பி அரியவகை ஆந்தையை பிடித்து சென்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இது களஞ்சிய ஆந்தை என்றும். பகலில் இதன் செயல்பாடு இல்லாததால் பகலில் காக்கை உட்பட மற்ற பறவைகள் இதனை ஓட ஓட விரட்டும் என்றும் இரவில் இந்த களஞ்சிய ஆந்தைக்கு நன்றாக கண் தெரியும் என்றும். மற்ற பறவைகளை இது இரவில் ஓட ஓட விரட்டும் என்றும் கூறினர். 

Tags:    

Similar News