தமிழ்நாடு

அரசு விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்த 8 ஆம்னி பஸ்கள் பறிமுதல்- ரூ.18.76 லட்சம் அபராதம் வசூல்

Published On 2023-11-13 08:48 GMT   |   Update On 2023-11-13 08:48 GMT
  • விதிகளை மீறும் ஆம்னி பஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்து இருந்தது.
  • 223 பஸ்கள் விதிகளை மீறி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை:

பண்டிகை காலங்களில் வெளியூர் செல்லும் மக்களிடம் ஆம்னி பஸ்களில் தாறுமாறான கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம். இது தொடர்பாக உரிமையாளர்களுடன் பேசி கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகையின் போது விதிகளை மீறும் ஆம்னி பஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்து இருந்தது.

கடந்த இரண்டு நாட்களாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார்கள் 6699 ஆம்னி பஸ்களை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது 1223 பஸ்கள் விதிகளை மீறி செயல்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது

இதையடுத்து அந்த பஸ்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது அபராதமாக ரூ.18 லட்சத்து 76 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

கூடுதல் கட்டணம் வசூலித்த எட்டு ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். இதேபோல் ஊர்களுக்கு சென்றவர்கள் நாளை முதல் திரும்பி வர தொடங்குவார்கள். அப்போதும் ஆம்னி பஸ்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Tags:    

Similar News