தமிழ்நாடு

மாவீரர் பூலித்தேவரின் 308-வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published On 2023-09-01 07:44 GMT   |   Update On 2023-09-01 07:44 GMT
  • மு.க. ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் மாவீரர் பூலித்தேவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  • விடுதலைப் போராட்டத்துக்கான உணர்வைக் கிளர்ந்தெழச் செய்த மாவீரர் பூலித்தேவரின் 308-வது பிறந்தநாள்.

சென்னை:

மாவீரர் பூலித்தேவரின் 308-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இந்திய நிலப்பரப்பில் முதன்முதலில் போர்முரசம் கொட்டி, விடுதலைப் போராட்டத்துக்கான உணர்வைக் கிளர்ந்தெழச் செய்த மாவீரர் பூலித்தேவரின் 308-வது பிறந்தநாள்.

அடக்க நினைத்தால் தமிழர் பொறுக்கமாட்டார், அந்நியர் ஆதிக்கத்தை அடித்து நொறுக்குவர் எனக் காட்டிய அவரது புகழ் என்றும் தமிழ் நிலத்தில் நிலைத்து நிற்கும்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News