தமிழ்நாடு செய்திகள்
சிங்கம்புணரி மஞ்சுவிரட்டு: மாடு முட்டியதில் முதியவர் பலி
சிங்கம்புணரி அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்து சென்ற மாடுகள் வழியில் சிக்கியவர்களை முட்டி தள்ளியது. எனினும் இளைஞர்கள் அதனை விரட்டி சென்று அடக்க முயன்றனர்.
சிங்கம்புணரி:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அரளிப்பாறையில் ஆண்டுதோறும் மாசிமக திருவிழாவின் 10-ம் நாளில் மஞ்சு விரட்டு நடைபெறும். திறந்தவெளியில் நடைபெறும் இதனை காண சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வருவார்கள்.
இந்த ஆண்டு மஞ்சு விரட்டு நேற்று நடைபெற்றது. அரளிப்பாறை மலை மீதுள்ள பாலமுருகன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு சேவுகமூர்த்தி அய்யனார்கோயில் காளைகளுக்கு மரியாதை செய்து, காளைகளுக்கு வேஷ்டி, துண்டு வழங்கப்பட்டன. பிறகு தொழுவத்திலிருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டதும் மற்ற காளைகள் தொடர்ந்து அவிழ்க்கப்பட்டன.
பதிவு செய்யப்பட்ட 125 மாடுகள் மட்டும் ஜல்லிக்கட்டு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. எனினும் ஆங்காங்கே வயல்வெளிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள், கட்டு மாடுகள் (தொழுவத்தில் அடைக்காத மாடுகள்) அவிழ்த்து விடப்பட்டன.
இதில் கூட்டத்தில் சீறிப்பாய்ந்து சென்ற மாடுகள் வழியில் சிக்கியவர்களை முட்டி தள்ளியது. எனினும் இளைஞர்கள் அதனை விரட்டி சென்று அடக்க முயன்றனர். மஞ்சுவிரட்டு மாடு முட்டியதில் மேலூரை அடுத்த கிழையூர் கிராமத்தை சேர்ந்த சுந்தரம் (வயது 60) பலத்தகாயம் அடைந்தார்.
அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுந்தரம் இறந்தார். மாடுகள் முட்டியதில் சுமார் 110 பேருக்கு மேல் காயமடைந்தனர். இதில் பலர் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்றனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அரளிப்பாறையில் ஆண்டுதோறும் மாசிமக திருவிழாவின் 10-ம் நாளில் மஞ்சு விரட்டு நடைபெறும். திறந்தவெளியில் நடைபெறும் இதனை காண சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வருவார்கள்.
இந்த ஆண்டு மஞ்சு விரட்டு நேற்று நடைபெற்றது. அரளிப்பாறை மலை மீதுள்ள பாலமுருகன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு சேவுகமூர்த்தி அய்யனார்கோயில் காளைகளுக்கு மரியாதை செய்து, காளைகளுக்கு வேஷ்டி, துண்டு வழங்கப்பட்டன. பிறகு தொழுவத்திலிருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டதும் மற்ற காளைகள் தொடர்ந்து அவிழ்க்கப்பட்டன.
பதிவு செய்யப்பட்ட 125 மாடுகள் மட்டும் ஜல்லிக்கட்டு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. எனினும் ஆங்காங்கே வயல்வெளிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள், கட்டு மாடுகள் (தொழுவத்தில் அடைக்காத மாடுகள்) அவிழ்த்து விடப்பட்டன.
இதில் கூட்டத்தில் சீறிப்பாய்ந்து சென்ற மாடுகள் வழியில் சிக்கியவர்களை முட்டி தள்ளியது. எனினும் இளைஞர்கள் அதனை விரட்டி சென்று அடக்க முயன்றனர். மஞ்சுவிரட்டு மாடு முட்டியதில் மேலூரை அடுத்த கிழையூர் கிராமத்தை சேர்ந்த சுந்தரம் (வயது 60) பலத்தகாயம் அடைந்தார்.
அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுந்தரம் இறந்தார். மாடுகள் முட்டியதில் சுமார் 110 பேருக்கு மேல் காயமடைந்தனர். இதில் பலர் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்றனர்.