தமிழ்நாடு செய்திகள்
சென்னிமலை முருகன் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பின்பு இன்று முதல் திருமணம் செய்ய அனுமதி
சென்னிமலை முருகன் கோவிலில் இன்று ஒரே நாளில் 9 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
சென்னிமலை:
கொரோனா காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டது. கொரோனா பரவல் குறைவதை தொடர்ந்து கட்டுப்பாடுகள் தளர்த்தபட்டு வருகிறது.
ஆனாலும் ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக திருமண நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் தற்போது வழிபாட்டு தலங்களில் திருமண நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பின்பு இன்று முதல் சென்னிமலை முருகன் கோவிலில் திருமண நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று அதிகாலை முதல் சென்னிமலை முருகன் கோவிலில் திருமணம் நடைபெற அனுமதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இன்று ஒரே நாளில் 9 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
9 திருமண தம்பதியர் மற்றும் அவருடன் வந்த உறவினர்கள் மேளதாளம் என கோவில் வளாகமே களை கட்டியது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுதான் கோவில் வளாகம் மிகவும் எழுச்சியுடன் களைகட்டி இருந்தது.
கொரோனா காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டது. கொரோனா பரவல் குறைவதை தொடர்ந்து கட்டுப்பாடுகள் தளர்த்தபட்டு வருகிறது.
ஆனாலும் ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக திருமண நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் தற்போது வழிபாட்டு தலங்களில் திருமண நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பின்பு இன்று முதல் சென்னிமலை முருகன் கோவிலில் திருமண நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று அதிகாலை முதல் சென்னிமலை முருகன் கோவிலில் திருமணம் நடைபெற அனுமதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இன்று ஒரே நாளில் 9 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
9 திருமண தம்பதியர் மற்றும் அவருடன் வந்த உறவினர்கள் மேளதாளம் என கோவில் வளாகமே களை கட்டியது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுதான் கோவில் வளாகம் மிகவும் எழுச்சியுடன் களைகட்டி இருந்தது.