தமிழ்நாடு
கொரோனா தடுப்பூசி

மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் திருவண்ணாமலை முதலிடம்

Published On 2022-01-04 06:59 GMT   |   Update On 2022-01-04 06:59 GMT
முதல் நாளில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் திருவண்ணாமலை முதலிடம் பிடித்துள்ளது.
திருவண்ணாமலை:

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் 10,11,12-ம் வகுப்புகளில் படிக்கும் 15 முதல் 18 வயது வரையுள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதல் நாளில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் திருவண்ணாமலை முதலிடம் பிடித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 544 பள்ளிகள், 17 பாலிடெக்னிக், 22 ஐ.டி.ஐ.களில் 15 முதல் 18 வயது வரையுள்ளவர்கள் 1 லட்சத்து 13 ஆயிரத்து 800 பேர் உள்ளனர். இவர்களில் நேற்று ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து இலக்கில் 19 சதவீதம் கடந்த நிலையில் மாநில அளவில் திருவண்ணாமலை மாவட்டம் தடுப்பூசி செலுத்துவதில் முதலிடத்தை பிடித்துள்ளது.

விரைவில் 100 சதவீத இலக்கை அடைய மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News