செய்திகள்
கொரோனா வைரஸ்

குன்னூர் மலை ரெயில் ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு- கவர்னர் பயணித்ததால் பரபரப்பு

Published On 2021-10-20 12:27 IST   |   Update On 2021-10-20 12:27:00 IST
குன்னூர் ரெயில் நிலையத்தில் பொறியியல் பிரிவில் பணிபுரியும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
குன்னூர்:

நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள இயற்கை அழகை முழுவதுமாக ரசிக்கும் வகையில் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையும், குன்னூரில் இருந்து ஊட்டி வரையும் இந்த ரெயில் இயக்கப்படுகிறது. மலை ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். இதனால் எப்போதும் மலை ரெயிலுக்கு தனி மவுசு உண்டு. கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக தற்போது மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் குன்னூர் ரெயில் நிலையத்தில் பொறியியல் பிரிவில் பணிபுரியும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதனால் அவர்களுடன் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் மலை ரெயிலில் பயணித்த சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

கடந்த 15-ந் தேதி தமிழக கவர்னர் ஆர்.என். ரவி ஊட்டிக்கு வந்திருந்தார். அப்போது அவர் ஊட்டியில் இருந்து குன்னூருக்கு குடும்பத்துடன் மலை ரெயிலில் பயணித்தார். இந்த நிலையில் ரெயில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News