செய்திகள்
மீன்பிடி தடைக்காலம் அமல்- கடலூர் மாவட்டத்தில் 4 ஆயிரம் படகுகள் நிறுத்தம்
கடலூர் மாவட்டத்தில் மீன்பிடி தடை காலைம் தொடங்கியது. எனவே கடற்கரையில் சுமார் 4 ஆயிரம் படகுகள் நிறுத்தப்பட்டு உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், தாழங்குடா, துறைமுகம், சித்திரைப்பேட்டை, ராஜாபேட்டை, எம்.ஜி.ஆர் திட்டு, கிள்ளை, நல்லவாடு உட்பட 49 கிராமங்கள் உள்ளது.
மீன்பிடி தொழிலை நம்பி 1 லட்சம் மீனவர்கள் உள்ளனர். இவர்கள் 2,000 பைபர் படகு, 1,500 கட்டுமர படகு, 500 விசைப்படகுகளில் மீன்பிடித்து வருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 16-ந் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கப்படும். இது கடலில் மீன் வளத்தை பெருக்கும் வகையிலும், மீன்வளத்தை பாதுகாத்திடும் வகையிலும் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவோருக்கு தொடர்ந்து மீன்கள் கிடைத்திடும் வகையிலும் மத்திய அரசால் வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடி தடை காலம் 2 மாதங்கள் அமுல்படுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி தற்போது வங்ககடலில் ஏப்ரல் 16 முதல் ஜுன் 15-ந் தேதி வரை மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் எந்திரம் பொருத்தப்பட்ட 4 ஆயிரம் மீன்பிடி படகுகள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்களும் கரை திரும்ப வேண்டுமென உத்தரவிடப்பட்டது.
அரசு உத்தரவுப்படி கடலூர் மாவட்டத்தில் மீன்பிடி தடை காலைம் தொடங்கியது. எனவே கடற்கரையில் சுமார் 4 ஆயிரம் படகுகள் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் கடற்கரை களை இழந்து காணப்படுகிறது. இந்த தொழிலை நம்பி உள்ள ஐஸ் கம்பெனிகளும் முடங்கி உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், தாழங்குடா, துறைமுகம், சித்திரைப்பேட்டை, ராஜாபேட்டை, எம்.ஜி.ஆர் திட்டு, கிள்ளை, நல்லவாடு உட்பட 49 கிராமங்கள் உள்ளது.
மீன்பிடி தொழிலை நம்பி 1 லட்சம் மீனவர்கள் உள்ளனர். இவர்கள் 2,000 பைபர் படகு, 1,500 கட்டுமர படகு, 500 விசைப்படகுகளில் மீன்பிடித்து வருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 16-ந் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கப்படும். இது கடலில் மீன் வளத்தை பெருக்கும் வகையிலும், மீன்வளத்தை பாதுகாத்திடும் வகையிலும் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவோருக்கு தொடர்ந்து மீன்கள் கிடைத்திடும் வகையிலும் மத்திய அரசால் வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடி தடை காலம் 2 மாதங்கள் அமுல்படுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி தற்போது வங்ககடலில் ஏப்ரல் 16 முதல் ஜுன் 15-ந் தேதி வரை மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் எந்திரம் பொருத்தப்பட்ட 4 ஆயிரம் மீன்பிடி படகுகள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்களும் கரை திரும்ப வேண்டுமென உத்தரவிடப்பட்டது.
அரசு உத்தரவுப்படி கடலூர் மாவட்டத்தில் மீன்பிடி தடை காலைம் தொடங்கியது. எனவே கடற்கரையில் சுமார் 4 ஆயிரம் படகுகள் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் கடற்கரை களை இழந்து காணப்படுகிறது. இந்த தொழிலை நம்பி உள்ள ஐஸ் கம்பெனிகளும் முடங்கி உள்ளது.