செய்திகள்
சரத்குமார்

தஞ்சை, நீலகிரி மாவட்டங்களுக்கு சமத்துவ மக்கள் கட்சி செயலாளர்கள் நியமனம் - சரத்குமார் அறிவிப்பு

Published On 2021-01-26 07:29 GMT   |   Update On 2021-01-26 07:29 GMT
தஞ்சை, நீலகிரி மாவட்டங்களுக்கு சமத்துவ மக்கள் கட்சி செயலாளர்கள் நியமனம் செய்துள்ளதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை:

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

சமத்துவ மக்கள் கட்சியின் தஞ்சை, வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்த குடந்தை என்.ராஜா இன்று முதல் தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களை ஒருங்கிணைத்த தஞ்சை மண்டல அமைப்புச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

நீலகிரி மாவட்ட பொறுப்பாளராக கட்சிப் பணியாற்றி வந்த ஆர்.சுரேந்திரன் நீலகிரி மாவட்ட செயலாளராகவும், கும்பகோணம் நகர இளைஞரணி செயலாளராக பொறுப்பு வகித்த ஆனந்த் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News