செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

விராலிமலையில் ஜன.17 அன்று ஜல்லிக்கட்டு நடக்கும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2020-12-24 13:14 IST   |   Update On 2020-12-24 13:14:00 IST
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஜனவரி 17-ஆம் தேதி மிகப்பெரிய ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட மினி கிளினிக்கை, வீர பட்டியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் இரட்டை இலை துளிர்த்து நிற்கும் என நம்பிக்கை தெரிவித்தார். ஜனவரி 17-ஆம் தேதி விராலிமலையில் மிகப்பெரிய ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Similar News