செய்திகள்
கமல்ஹாசன்

திமுக-வும் அதிமுக-வும் மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி என் பணியை சுலபமாக்கிவிட்டனர்- கமல்ஹாசன்

Published On 2020-12-22 12:53 GMT   |   Update On 2020-12-22 12:53 GMT
வெட்கமின்றி ஊழல் செய்கிறார்கள் எனக் கூறிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், திமுக-வும் அதிமுக-வும் மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி எனது பணியை சுலபமாக்கின்றனர் எனத் தெரவிதத்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கடலூரில் இன்று பேசும்போது ‘‘தற்போது வெட்கமின்றி பகிரங்கமாக ஊழல் செய்கிறார்கள். ஊழல் செய்துவிட்டு சிறை செல்வோர் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.

வருமான வரி செலுத்தியது தொடர்பாக என்னிடம் வெள்ளை அறிக்கை கேட்கின்றனர். வருமான வரி தொடர்பாக வருமான வரித்துறைதான் என்னிடம் கேள்வி கேட்கவேண்டும்.

ஊழல்வாதிகளை பதவியில் அமர விடக்கூடாது. திமுக-வும் அதிமுக-வும் மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி என் பணியை சுலபமாக்கிவிட்டனர்’’ என்றார்.

அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் திமுக தலைவர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். அப்போது 97 பக்க ஊழல் புகார் பட்டியலை அளித்தனர்.

அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக காலத்தில் விடப்பட்ட டெண்டர்களில்தான் ஊழல் எனப் பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News