செய்திகள்
கொள்ளை

ஜெயங்கொண்டம் அருகே ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2020-09-23 09:05 GMT   |   Update On 2020-09-23 09:05 GMT
ஜெயங்கொண்டம் அருகே ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளர் வீட்டில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடாலி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் போடங்குடி பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் ராஜ்குமாருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் அவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அருகில் வசித்து வரும் அவரது தந்தை ராமதாஸ் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

அங்கு கடந்த 10 நாட்களாக இருந்து வரும் நிலையில், நேற்று ராஜ்குமாரின் மனைவி அவர் வசித்து வந்த வீட்டை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததுடன், உள்ளே பல்வேறு பொருட்கள் சிதறிக் கிடந்தது.

மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ராஜ்குமார் ஹார்டுவேர் பொருட்கள் வாங்குவதற்காக வைத்திருந்த ரூ.3.40 லட்சம் ஆகியவை கொள்ளை போயி ருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும்.

இது குறித்து தா.பழுர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

ராஜ்குமார் வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News