செய்திகள்
கோப்பு படம்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 49 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்

Published On 2020-09-09 18:02 GMT   |   Update On 2020-09-09 18:02 GMT
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 49 ஆயிரத்து 203 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
\சென்னை:

தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 584 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரத்து 524 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 49 ஆயிரத்து 203 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 6 ஆயிரத்து 516 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 23 ஆயிரத்து 231 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 78 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 90 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

அரியலூர் - 383
செங்கல்பட்டு - 2,468
சென்னை - 10,854
கோவை - 3,891
கடலூர் - 3,707
தர்மபுரி - 442
திண்டுக்கல் - 974
ஈரோடு - 1,024
கள்ளக்குறிச்சி - 1,058
காஞ்சிபுரம் - 1,284
கன்னியாகுமரி - 847
கரூர் - 402
கிருஷ்ணகிரி - 664 
மதுரை - 1,060
நாகை - 1,085
நாமக்கல் - 753
நீலகிரி - 417
பெரம்பலூர் - 93
புதுக்கோட்டை - 811
ராமநாதபுரம் - 349
ராணிப்பேட்டை - 776
சேலம் - 2,046
சிவகங்கை - 237
தென்காசி - 681
தஞ்சாவூர் - 921
தேனி - 786
திருப்பத்தூர் - 483
திருவள்ளூர் - 1,905
திருவண்ணாமலை - 1,576
திருவாரூர் - 853
தூத்துக்குடி - 687
திருநெல்வேலி - 1,093
திருப்பூர் - 1,284
திருச்சி - 913
வேலூர் - 1,006
விழுப்புரம் - 750
விருதுநகர் - 557
விமானநிலைய கண்காணிப்பு 
வெளிநாடு - 16
உள்நாடு - 65
ரெயில் நிலைய கண்காணிப்பு - 2

மொத்தம் - 49,203

Tags:    

Similar News