செய்திகள்
கொரோனா வைரஸ்

காஞ்சிபுரத்தில் 14 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

Published On 2020-08-17 14:03 IST   |   Update On 2020-08-17 14:03:00 IST
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 130 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,006 ஆக உயர்ந்துள்ளது.
காஞ்சிபுரம்:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 950 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 38 ஆயிரத்து 55 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 6 ஆயிரத்து 19 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 78 ஆயிரத்து 270 ஆக அதிகரித்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக  உள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 130 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 130 பேருக்கு கொரோனா உறுதியானதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,006 ஆக உயர்ந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 10,853 பேர் குணமடைந்துள்ளனர். 2,977 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 176 பேர் உயிரிழந்துள்ளனர்.

Similar News