செய்திகள்
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் பலி
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த விவரங்களை புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்றைய தினம் இதுவரை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி 305 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,680 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 6 பேர் உயிரிழந்ததையடுத்து, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 1,504 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் 1,246 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து இதுவரை 3,828 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.