செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுச்சேரியில் இன்று மேலும் 305 பேருக்கு கொரோனா உறுதி

Published On 2020-08-13 06:38 GMT   |   Update On 2020-08-13 06:38 GMT
புதுச்சேரியில் இன்று மேலும் 305 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,680 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:

இந்தியாவில் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த நிலையில், இன்று 60 ஆயிரத்தையும் தாண்டி 66,999 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 942 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 23,96,638 பேர் பாதிக்கப்பட்டுள் நிலையில் 16,95,982 குணமடைந்துள்ளனர். 47,033 பேர் உயிரிழந்துள்ளனர்.  6,53,622 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் குணமடைந்தோர் சதவிகிதம் 70.77 ஆகவும், உயிரிழந்தோர் விகிதம் 1.98 ஆகவும், சிகிச்சை பெற்று வருபவர்களின் விகிதம் 27.27 ஆகவும் உள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் இன்று மேலும் 305 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  6,680 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் 3,828 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 102 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Tags:    

Similar News