செய்திகள்
கோப்புப்படம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 40 பேருக்கு கொரோனா

Published On 2020-07-10 03:12 GMT   |   Update On 2020-07-10 03:12 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் 40 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 535-ஆக உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று வரை 495 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 206 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 281 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 40 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 535-ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News