செய்திகள்
கொரோனா வைரஸ்

ஈரோட்டில் கொரோனா பாதிப்பு 75 ஆக உயர்வு

Published On 2020-06-09 13:08 IST   |   Update On 2020-06-09 13:08:00 IST
ஈரோடு மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி கடந்த 20 நாட்களுக்கு முன்னர் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அவர் அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதே போல் ஈரோட்டை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் செங்கல்பட்டில் உள்ள தனது சகோதரரை பார்க்க சென்றார். சகோதரர் ஏற்கனவே கொரோனா பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு பணம் கொடுப்பதற்காக ஈரோட்டில் இருந்து சென்றதோடு சில நாட்கள் சகோதரரை உடன் இருந்து கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கும் கொரோனா தொற்று பரவியது. இதனை தொடர்ந்து அவரும் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 75 ஆக உயர்ந்து உள்ளது.

Similar News