உலகம்

வங்கதேச பிரதமராக பதவி ஏற்றார் தாரிக் ரஹ்மான்

Published On 2026-02-17 16:49 IST   |   Update On 2026-02-17 16:49:00 IST
  • தாரிக் ரஹ்மான் கட்சி 297 இடங்களில் 209 இடங்களில் வெற்றி பெற்றது.
  • 17 வருடத்திற்குப் பிறகு சொந்த நாடு திரும்பி ஆட்சியை பிடித்துள்ளார்.

வங்கதேச நாட்டின் புதிய பிரதமராக கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் இன்று மதியம் பதவி ஏற்றுக் கொண்டார். 17 வருடத்திற்குப் பிறகு சொந்த நாடு திரும்பிய நிலையில் தேர்தல் களத்தில் நின்று பெற்றி பெற்றுள்ளார்.

60 வயதான வங்கதேசம் தேசியவாத கட்சி (BNP) தலைவர் தாரிக் ரஹ்மான் இன்று பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து அமைச்சரவை பதவி ஏற்க உள்ளது. முன்னதாக பாராளுமன்ற BNP கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 5 ஆண்டுகள் பிரதமாக இருப்பார்.

வங்கதேசத்தின் 13-வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த 12-ந்தேதி நடைபெற்றது. இதில் 297 இடங்களில் 209 இடங்களில் பிஎன்பி கட்சி வெற்றி பெற்றது. வலது சாரி கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி 68 இடங்களை பிடித்தது.

Tags:    

Similar News