செய்திகள்
மாமனார் வீட்டில் மகன் தங்கியதால் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை
மாமனார் வீட்டில் தங்களது மகன் தங்கியதால் மனம் உடைந்த தம்பதியினர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருக்குவளை போலீஸ் சரகம் பெரிய வடக்குவெளி ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் துரைசாமி(வயது 55). இவரது மனைவி நாகம்மாள்(50). இருவரும் விவசாய கூலித்தொழிலாளர்கள். இவர்களுக்கு சுதாகர் என்ற மகனும், இளமதி என்ற மகளும் உள்ளனர். இதில் சுதாகருக்கு திருமணமாகி தாய், தந்தையருடன் வசித்து வந்தார். அதேபோல் மகளுக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சுதாகருடைய மாமனாருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் மாமனார் வீட்டிலேயே தங்கி சுதாகரும், அவரது மனைவியும் கவனித்து வந்துள்ளனர். மேலும் சுதாகர் தனது வீட்டுக்கு அவ்வப்போது சென்று தனது தாய்-தந்தையை பார்த்து வந்துள்ளார்.
ஆனாலும் வயதான காலத்தில் தங்கள் மகன் அருகில் இருந்து தங்களை பார்த்துக்கொள்ளவில்லையே என்ற ஏக்கம் துரைசாமியிடம் இருந்து வந்துள்ளது. இதுதொடர்பான தனது ஏக்கத்தை துரைசாமி அடிக்கடி தனது மனைவியிடம் கூறி வந்துள்ளார். இதனால் தனிமையில் இருந்த துரைசாமியும், அவரது மனைவியும் மன உளைச்சல் ஏற்பட்டு வேதனையில் வாடி வந்தனர்.
இந்தநிலையில் துரைசாமியும், அவரது மனைவி நாகம்மாளும் நேற்று முன்தினம் இரவு தங்களது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் திருக்குவளை போலீஸ் சரகம் பெரிய வடக்குவெளி ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் துரைசாமி(வயது 55). இவரது மனைவி நாகம்மாள்(50). இருவரும் விவசாய கூலித்தொழிலாளர்கள். இவர்களுக்கு சுதாகர் என்ற மகனும், இளமதி என்ற மகளும் உள்ளனர். இதில் சுதாகருக்கு திருமணமாகி தாய், தந்தையருடன் வசித்து வந்தார். அதேபோல் மகளுக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சுதாகருடைய மாமனாருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் மாமனார் வீட்டிலேயே தங்கி சுதாகரும், அவரது மனைவியும் கவனித்து வந்துள்ளனர். மேலும் சுதாகர் தனது வீட்டுக்கு அவ்வப்போது சென்று தனது தாய்-தந்தையை பார்த்து வந்துள்ளார்.
ஆனாலும் வயதான காலத்தில் தங்கள் மகன் அருகில் இருந்து தங்களை பார்த்துக்கொள்ளவில்லையே என்ற ஏக்கம் துரைசாமியிடம் இருந்து வந்துள்ளது. இதுதொடர்பான தனது ஏக்கத்தை துரைசாமி அடிக்கடி தனது மனைவியிடம் கூறி வந்துள்ளார். இதனால் தனிமையில் இருந்த துரைசாமியும், அவரது மனைவியும் மன உளைச்சல் ஏற்பட்டு வேதனையில் வாடி வந்தனர்.
இந்தநிலையில் துரைசாமியும், அவரது மனைவி நாகம்மாளும் நேற்று முன்தினம் இரவு தங்களது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.