செய்திகள்
கொரோனா வைரஸ்

டெல்லி சென்று சீர்காழி திரும்பியவர்களுக்கு கொரோனா பரிசோதனை

Published On 2020-04-02 08:00 GMT   |   Update On 2020-04-02 08:00 GMT
டெல்லி மாநாட்டில் பங்கேற்று சீர்காழி பகுதிக்கு திரும்பிய நபர்கள் கண்டறியப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக மயிலாடுதுறை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பிவைக்கப்பட்டனர்.
சீர்காழி:

சீர்காழி வட்டம் பெருந்தோட்டம், சீர்காழி தாடாளன் கோயில் பகுதி ஆகிய இடங்களிலிருந்து 6 நபர்கள் மார்ச் 18 ம்தேதி புதுடில்லி சென்று மார்ச் 24 ம் தேதி சொந்த ஊருக்கு திரும்பினார்கள். இந்நிலையில் தில்லி சென்று திரும்பியவர்கள் கண்டறியப்பட்டு சீர்காழி வட்டார சுகாதாரத்துறை சார்பில் அவர்கள் அனைவரும் 28 நாட்கள் தனிமையில் இருக்கும்படியும், இடது கையில் நான் எனது நாட்டு மக்கள் நலனுக்காக தனிமையில் உள்ளேன் என்ற வாசகம் அடங்கிய ஸ்டாம்ப் இடப்பட்டு அவர்களின் வீட்டில் தனிமைபடுத்துதல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

இதனிடையே தில்லி சென்று திரும்பிய 6 நபர்களும் சீர்காழி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். ராஜ்மோகன் தலைமையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கான பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மருத்துவ அலுவலர் டாக்டர்.பிரபாகரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராம்மோகன், சுகாதார ஆய்வாளர்கள் துரை கார்த்திக்,ரெங்கராஜன், வருவாய் ஆய்வாளர் கலாவதி, கிராம நிர்வாக அலுவலர் பாலு, ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News