செய்திகள்
கோப்பு படம்

பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

Published On 2019-10-30 11:48 GMT   |   Update On 2019-10-30 11:48 GMT
வேலூரில் இரவு நேரங்களில் பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யபட்டார்.
வேலூர்:

வேலூர் போக்குவரத்து போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம். இவர் வாகன தணிக்கையின்போது ஆவணங்கள் இல்லை என்று கூறி பெண் வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதித்துள்ளார்.

அப்போது அவர்களின் செல்போன் எண்களையும் ரசீதில் பதிவு செய்துள்ளார். அந்த செல்போன் எண்களை பயன்படுத்தி சில பெண்களுக்கு இரவு நேரங்களில் ஆபாச வீடியோ அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர்களது உறவினர்கள் சிலர் கடந்த 25-ந்தேதி போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கத்திடம் தட்டிக் கேட்டனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் மன்னிப்பு கேட்பது போன்ற சம்பவம் இடம் பெற்றிருந்தது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கத்தை வேலூர் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டார். மேலும் அவரது உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தினார். விசாரணையில் பெண்களுக்கு ஆபாச தகவல் அனுப்பியது உறுதியானது. இதுகுறித்து அவர் எஸ்.பி.க்கு அறிக்கை அளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அளித்தார். இதையடுத்து போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கத்தை எஸ்.பி. சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
Tags:    

Similar News