செய்திகள்
திருப்பத்தூர் அருகே விவசாயி தீக்குளித்து தற்கொலை
திருப்பத்தூர் அருகே 10 நாளில் மகளுக்கு திருமணம் நடக்க உள்ள நிலையில் விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் கீழ் மத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 50) விவசாயி. இவருக்கு திருமணமாகி மீனா என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர்.
மூத்த மகளுக்கு இன்னும் 10 நாட்களில் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை சரவணன் வீட்டிலிருந்து சலூன்கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அவர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலை காப்புக்காடு புலியானூர் என்ற பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அதில் இருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றி தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
திருப்பத்தூர் தாலுகா போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கீழ் மத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 50) விவசாயி. இவருக்கு திருமணமாகி மீனா என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர்.
மூத்த மகளுக்கு இன்னும் 10 நாட்களில் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை சரவணன் வீட்டிலிருந்து சலூன்கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அவர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலை காப்புக்காடு புலியானூர் என்ற பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அதில் இருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றி தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
திருப்பத்தூர் தாலுகா போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.