செய்திகள்
மழை (கோப்புப்படம்)

ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை

Published On 2019-10-17 04:34 GMT   |   Update On 2019-10-17 04:34 GMT
ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் ரோட்டில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் மெதுவாக சென்றது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் மழை கொட்டியது.

நேற்று பல்வேறு பகுதிகளில் காலை மற்றும் மதியம், இரவு என நாள் முழுவதும் மழை விட்டு விட்டு பெய்தது,

ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் ரோட்டில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் மெதுவாக சென்றது.

ரோட்டின் ஓரம் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் ஆங்காங்கே சிறு குட்டை போல் தேங்கி நின்றது. இதே போல் சத்தியமங்கலம், பவானிசாகர், சென்னிமலை, மொடக்குறிச்சி, பெருந்துறை, நம்பியூர், கோபி என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை கொட்டியது.

அதிகபட்சமாக வனப்பகுதிகளான கடம்பூர் மற்றும் பெரும்பள்ளம் அணை பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை கொட்டியது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஈரோடு மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Tags:    

Similar News