செய்திகள்

வேலூர் போலீஸ் நிலையத்தில் வியாபாரி தீக்குளிக்க முயற்சி

Published On 2019-06-24 13:09 GMT   |   Update On 2019-06-24 13:09 GMT
வேலூர் போலீஸ் நிலையத்தில் வியாபாரி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர்:

வேலூர் அரசமர பேட்டையை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 50). பழைய பஸ் நிலையத்தில் உள்ள கடையில் பூ வியாபாரம் செய்து வந்தார். இன்று காலை வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் முன்பு உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீர் ஊற்றி மீட்டனர்.

இதனால் போலீஸ் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அண்ணாமலை கூறியதாவது:- 

பழைய பஸ் நிலையத்தில் வைத்திருந்த பூ கடையை பெண் வியாபாரி ஒருவரிடம் பார்த்துக் கொள்ளுமாறு கூறினேன். அந்த கடைக்கு அவரது பெயரில் மாநகராட்சிக்கு வரி செலுத்திவிட்டு கடைக்கு உரிமை கொண்டாடினார்.

இதுபற்றி மாநகராட்சி அலுவலகம், வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். அவர்கள் என்னை அலைக்கழித்தனர். அவரிடமிருந்து கடையை மீட்டுதர கோரி போலீஸ் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்றேன் என்றார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News