செய்திகள்

குவைத்தில் இருந்து வந்த சென்னை விமானத்தில் ரூ. 21 லட்சம் தங்கம் கடத்தல்- 2 பேர் சிக்கினர்

Published On 2019-06-23 10:12 GMT   |   Update On 2019-06-23 10:12 GMT
குவைத்தில் இருந்து சென்னைக்கு வந்த பயணிகள் விமானத்தில் தங்க கட்டிகளை கடத்திய 2 பேர் பிடிப்பட்டனர்.

ஆலந்தூர்:

குவைத்தில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை 1 மணிக்கு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த 2 வாலிபர்களின் நடவடிக்கைகளில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர்.

அவர்கள் 2 பேரும் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்க கட்டிகளை கடத்தி வந்தது தெரிந்தது. மொத்தம் 593 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 21 லட்சம் ஆகும். தங்கக் கட்டிகள் யாருக்கு கடத்தப்பட்டது? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்-யார்? என்பது குறித்து பிடிபட்ட 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News