செய்திகள்
விபத்தில் ஆட்டோ சேதம் அடைந்திருப்பதை படத்தில் காணலாம்.

செஞ்சி அருகே ஆட்டோ மீது பஸ் மோதல்: தந்தை - மகன் பலி

Published On 2019-05-30 05:15 GMT   |   Update On 2019-05-30 05:15 GMT
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆட்டோ மீது பஸ் மோதிய விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சி:

திருவண்ணாமலை புதுவாணியங்குளம் 8-வது தெருவை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்(வயது 39) ஆட்டோ டிரைவர். இவரது மகன் விக்னேஷ்(19). பி.காம்.பட்டதாரி.

நேற்று மாலை இவர்கள் தங்களது சொந்த ஆட்டோவில் செஞ்சி வட்டம் வி.நயம்பாடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் திருவண்ணாமலைக்கு புறப்பட்டனர். ஆட்டோவை அரிகிருஷ்ணன் ஓட்டி சென்றார். ஆட்டோ செஞ்சி அருகே உள்ள செம்மேடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே திருவண்ணாமலையில் இருந்து புதுவைக்கு தனியார் பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ் திடீரென்று ஆட்டோ மீது மோதியது.

இதில் ஆட்டோ டிரைவர் அரிகிருஷ்ணன் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். பலத்த காயம்அடைந்த விக்னேஷ் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து புகாரின் பேரில் நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News