செய்திகள்

சூலூரில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

Published On 2019-05-14 04:25 GMT   |   Update On 2019-05-14 04:25 GMT
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சூலூர் தொகுதிக்குட்பட்ட சின்னியம் பாளையத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார்.
சூலூர்:

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு வருகிற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார். சூலூர் தொகுதியில் அவர் ஏற்கனவே முதல் கட்ட பிரசாரத்தை முடித்து விட்டார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் 2-வது கட்ட பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று இரவு கோவை வந்தார். இங்குள்ள ஓட்டலில் தங்கி உள்ளார்.

இன்று மாலை 5மணிக்கு அவர் சூலூர் தொகுதிக்குட்பட்ட சின்னியம் பாளையத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார். 5.45 மணிக்கு முத்துகவுண்டன் புதூர், 6.45-க்கு வாகராயம் பாளையம், இரவு 7.15 மணிக்கு கிட்டாம் பாளையம் நால் ரோடு, 8 மணிக்கு கருமத்தம்பட்டி (சோமனூர் பவர் அவுஸ்) 8.30 மணிக்கு சாமளாபுரம் ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் நின்றவாறு அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி. கந்தசாமிக்கு ஆதரவு திரட்டுகிறார். இரவு 9.20 மணிக்கு சூலூரில் பிரசாரத்தை முடிக்கிறார்.
Tags:    

Similar News