செய்திகள்

மதுரை சிறையில் போராட்டம்- 25 கைதிகள் மீது வழக்கு

Published On 2019-04-24 09:04 IST   |   Update On 2019-04-24 09:04:00 IST
மதுரை மத்திய சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 25 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #MaduraiCentralPrison #MaduraiPrisoners
மதுரை:

மத்திய சிறையில் காவல் துறையினர் தங்களை துன்புறுத்துவதாக கூறி சிறையில் உள்ள கைதிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டைகளை அவிழ்த்துவிட்டு, சிறை கட்டிடத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தடுக்க சென்ற காவலர்கள் கற்களை வீசி தாக்கி உள்ளனர்.



இதையடுத்து, சிறைத்துறை அளித்த புகாரின்பேரில், போராட்டத்தில் ஈடுபட்ட 25 கைதிகள் மீது 4 பிரிவின் கீழ் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிகாரிகளை பணி செய்ய விடாமல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #MaduraiCentralPrison #MaduraiPrisoners

Tags:    

Similar News