செய்திகள்
பிளஸ் 2 தேர்ச்சியில் வேலூர் கடைசி இடம்
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதில் வேலூர் மாவட்டம் மாநில அளவில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. #Plus2Results
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் 40 ஆயிரத்து 714 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 34 ஆயிரத்து 800 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 18 ஆயிரத்து 664 மாணவர்களில் 15 ஆயிரத்து 59 பேரும், 22 ஆயிரத்து 50 மாணவிகளில் 19 ஆயிரத்து 747 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விகிதம் 85.47 சதவீதம் ஆகும். இதன் மூலம் மாநில அளவில் 32வது இடம். அதாவது கடைசி இடத்தை வேலூர் பிடித்தது. கடந்த ஆண்டு 87 சதவீதம் தேர்ச்சி பெற்று 27வது இடத்தில் இருந்தது.
தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளதால் வேலூர் மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் கவலையடைந்துள்ளனர். அடுத்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #Plus2Results
வேலூர் மாவட்டத்தில் 40 ஆயிரத்து 714 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 34 ஆயிரத்து 800 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 18 ஆயிரத்து 664 மாணவர்களில் 15 ஆயிரத்து 59 பேரும், 22 ஆயிரத்து 50 மாணவிகளில் 19 ஆயிரத்து 747 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விகிதம் 85.47 சதவீதம் ஆகும். இதன் மூலம் மாநில அளவில் 32வது இடம். அதாவது கடைசி இடத்தை வேலூர் பிடித்தது. கடந்த ஆண்டு 87 சதவீதம் தேர்ச்சி பெற்று 27வது இடத்தில் இருந்தது.
தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளதால் வேலூர் மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் கவலையடைந்துள்ளனர். அடுத்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #Plus2Results