செய்திகள்
கவர்னர் பிறந்தநாள்- எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிறந்தநாளையொட்டி அவருக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பினார். #TNGovernor #Banwarilalpurohi #Edappadipalaniswami
சென்னை:
கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிறந்தநாளையொட்டி அவருக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பினார். அதில், “தங்களது மகிழ்ச்சிகரமான பிறந்த நாளில் உங்களுக்கு எனது பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நீங்கள் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சேவை புரிய நல்ல உடல்நலத்துடனும், அமைதியுடனும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் நன்றி தெரிவித்தார். #TNGovernor #Banwarilalpurohi #Edappadipalaniswami
கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிறந்தநாளையொட்டி அவருக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பினார். அதில், “தங்களது மகிழ்ச்சிகரமான பிறந்த நாளில் உங்களுக்கு எனது பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நீங்கள் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சேவை புரிய நல்ல உடல்நலத்துடனும், அமைதியுடனும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் நன்றி தெரிவித்தார். #TNGovernor #Banwarilalpurohi #Edappadipalaniswami