செய்திகள்
அனைத்து தொழிலாளருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்க முடியாமல் போனதற்கு ஸ்டாலினே காரணம் - முதலமைச்சர்
அனைத்து தொழிலாளர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்க முடியாமல் போனதுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான் காரணம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #Edappadipalanisamy
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார்.
கொங்கு மண்டல விவசாயிகளின் மனதையும் உள்ளத்தையும் குளிர வைக்கும் வகையில் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள்-மக்களின் 60 ஆண்டு கால கனவு திட்டமான அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
விவசாய கூலித்தொழிலாளர்கள் உள்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தோம். தேர்தலை காரணம் காட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தடை ஏற்படுத்தியதால் அதை கொடுக்க முடியவில்லை. இப்படி மக்கள் நலத்திட்டங்களுக்கு எதிராக இருப்பவர்தான் ஸ்டாலின்.
எனினும் அந்த தடையை உடைத்தெறிந்து தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என இங்கே தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் இன்னொன்றையும் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். தேர்தல் முடிந்ததும் தனியார் சேனல் கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியில் கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்துக்காக ரூ.247 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடக்கிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு முற்றிலும் தடுக்கப்பட்டு உள்ளது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் ஆட்சி மீது குறை கூறி பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு ஆட்சியை பிடிக்க பார்க்கிறார் ஸ்டாலின். அது ஒருபோதும் நடக்கப்போவது இல்லை.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே 6 மணி நேரம் மின்வெட்டு, 7 மணி நேர மின்வெட்டு, 8 மணி நேரம் மின்வெட்டாக இருந்த நிலையை மாற்றி, நெசவாளர்கள் பயன் பெறுகின்ற வகையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 24 மணி நேரமும் தடையில்லாத மின்சாரத்தை வழங்குகிற அரசு அம்மாவுடைய அரசு என்பதை நான் இந்த நேரத்திலே அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்து ரூ.28,000 கோடி ரூபாயை கல்வித் துறைக்காக ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை இன்றைக்கு கல்வித்துறையிலே நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.
பள்ளிப்படிப்பை முடித்த பின்னாலே மாணவர்கள் தொழில் கல்வி பயில வேண்டும் என்று சொன்னால் ஈரோடு மாவட்டத்திலேயே அரசு பாலிடெக்னிக் கல்லூரி கிடையாது. அம்மா அரசுதான் இந்த பெருந்துறை தொகுதிக்கு ரூ.52 கோடி ரூபாய் செலவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி கொண்டு வந்தது. உங்கள் பெருந்துறையில் தான் மேலும் நான்கு வழிச்சாலையும் அமைக்கப்பட்டு உள்ளது.
ஏழை எளிய மாணவர்கள் கட்டணமில்லாத கல்வியை கற்று வருகிறார்கள் என்பதை நான் உங்களுக்கு பெருமையோடு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #Edappadipalanisamy
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார்.
கொங்கு மண்டல விவசாயிகளின் மனதையும் உள்ளத்தையும் குளிர வைக்கும் வகையில் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள்-மக்களின் 60 ஆண்டு கால கனவு திட்டமான அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
விவசாய கூலித்தொழிலாளர்கள் உள்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தோம். தேர்தலை காரணம் காட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தடை ஏற்படுத்தியதால் அதை கொடுக்க முடியவில்லை. இப்படி மக்கள் நலத்திட்டங்களுக்கு எதிராக இருப்பவர்தான் ஸ்டாலின்.
எனினும் அந்த தடையை உடைத்தெறிந்து தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என இங்கே தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் இன்னொன்றையும் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். தேர்தல் முடிந்ததும் தனியார் சேனல் கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியில் கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்துக்காக ரூ.247 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடக்கிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு முற்றிலும் தடுக்கப்பட்டு உள்ளது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் ஆட்சி மீது குறை கூறி பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு ஆட்சியை பிடிக்க பார்க்கிறார் ஸ்டாலின். அது ஒருபோதும் நடக்கப்போவது இல்லை.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே 6 மணி நேரம் மின்வெட்டு, 7 மணி நேர மின்வெட்டு, 8 மணி நேரம் மின்வெட்டாக இருந்த நிலையை மாற்றி, நெசவாளர்கள் பயன் பெறுகின்ற வகையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 24 மணி நேரமும் தடையில்லாத மின்சாரத்தை வழங்குகிற அரசு அம்மாவுடைய அரசு என்பதை நான் இந்த நேரத்திலே அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்து ரூ.28,000 கோடி ரூபாயை கல்வித் துறைக்காக ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை இன்றைக்கு கல்வித்துறையிலே நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.
பள்ளிப்படிப்பை முடித்த பின்னாலே மாணவர்கள் தொழில் கல்வி பயில வேண்டும் என்று சொன்னால் ஈரோடு மாவட்டத்திலேயே அரசு பாலிடெக்னிக் கல்லூரி கிடையாது. அம்மா அரசுதான் இந்த பெருந்துறை தொகுதிக்கு ரூ.52 கோடி ரூபாய் செலவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி கொண்டு வந்தது. உங்கள் பெருந்துறையில் தான் மேலும் நான்கு வழிச்சாலையும் அமைக்கப்பட்டு உள்ளது.
ஏழை எளிய மாணவர்கள் கட்டணமில்லாத கல்வியை கற்று வருகிறார்கள் என்பதை நான் உங்களுக்கு பெருமையோடு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #Edappadipalanisamy