செய்திகள்
மன்சூர்அலிகான் குழந்தைக்கு தாலாட்டு பாடிய காட்சி.

குழந்தைக்கு தாலாட்டு பாடி மன்சூர் அலிகான் வாக்கு சேகரிப்பு

Published On 2019-04-10 07:11 GMT   |   Update On 2019-04-10 07:11 GMT
வயல்வெளியில் வேலை பார்த்த பெண்கள் மரக்கிளையில் தொட்டில் கட்டி தங்களது குழந்தைகளை தொட்டிலில் போட்டிருந்தனர். அங்கு சென்ற மன்சூர்அலிகான் குழந்தைகளுக்கு ஆரீராரோ என தாலாட்டு பாடினார். #LokSabhaElections2019 #MansoorAlikhan
திண்டுக்கல்:

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். இவர் அம்மியில் மசாலா அரைப்பது, இளநீர் வெட்டுவது, தேநீர் விற்பது, மீன் விற்பது, காய்கறி விற்பது என வித்தியாசமான முறையில் ஆங்காங்கே சென்று மக்களிடையே நூதன பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பழனி சுற்றுவட்டார பகுதிக்கு சென்ற இவர் பாப்பம்பட்டி பகுதியில் வாக்கு சேகரிக்க வந்தார். அப்போது வயல்வெளிகளில் வேலை பார்த்த பெண்கள் மரக்கிளையில் தொட்டில் கட்டி தங்களது குழந்தைகளை தொட்டிலில் போட்டிருந்தனர்.

அங்கு சென்ற மன்சூர்அலிகான் குழந்தைகளுக்கு ஆரீராரோ என தாலாட்டு பாடினார். அப்போது வயலில் களை பறித்த பெண்கள் மன்சூர்அலிகானை பார்த்ததும் ஓடிவந்தனர். அவர்களிடம் மன்சூர்அலிகான் உங்கள் வாழ்வு வளம்பெற கரும்பு விவசாயி சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள் என்றார். #LokSabhaElections2019 #MansoorAlikhan
Tags:    

Similar News