செய்திகள்

பண்ருட்டியில் வியாபாரியிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்

Published On 2019-04-02 16:32 IST   |   Update On 2019-04-02 16:32:00 IST
பாராளுமன்ற தேர்தலையொட்டி பண்ருட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் உரிய ஆவணம் இல்லாததால் வியாபாரியிடம் இருந்து ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
பண்ருட்டி:

பாராளுமன்ற தேர்தலையொட்டி பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுத்து பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும்படை கண்காணிப்பு குழு தலைவர் அருள் கணேஷ் தலைமையில் பண்டரக்கோட்டையில் அதிகாலை 2 மணியளவில் வாகன சோதனை செய்தார்.

அப்போது கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை கிழக்கு தெருவை சேர்ந்த ‌ஷபியுல்லா என்பவர் மினிலாரியை நிறுத்தி சோதனை செய்தார். அதில் ரூ.1 லட்சத்து 25ஆயிரம் இருந்தது அந்தபணத்திற்கு எந்தவித ஆவணமும் இல்லை. எனவே அந்த பணத்தை பறக்கும் படையினர் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட பணம் பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கீதா, துணை தாசில்தார் தனபதியிடம் ஒப்படைத்தனர்.

அதேபோல் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும்படை கண்காணிப்பு குழு தலைவர் சீனுவாசன் தலைமையில் ஆநத்தம் பகுதியில் மாலை 5 மணியளவில் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் வந்த பண்ருட்டி வியாபாரி ராஜா என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அவரிடம் எந்தவித ஆவணமின்றி இருந்த 2 லட்சத்து 93ஆயிரத்து 530 ரூபாயை குழுவினர் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட பணம் பண்ருட்டி தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் கீதா, துணை தாசில்தார் தனபதியிடம் ஒப்படைத்தனர்.

Similar News