செய்திகள்

கொல்லிமலை அடிவாரத்தில் பற்றி எரியும் காட்டுத்தீ- சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

Published On 2019-03-29 04:19 GMT   |   Update On 2019-03-29 04:19 GMT
கொல்லிமலை அடிவாரத்தில் தொடர்ந்து காட்டுத்தீ பற்றி எரிவதால் சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. #ForestFire #KolliHillsFire
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்கள், அருவிகள் மற்றும் பூங்காவை பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு காட்டுத் தீ ஏற்பட்டது. இதனால் ஏராளமான மரங்கள் கருகின. வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். எனினும், அடுத்தடுத்த இடங்களுக்கு தீ பரவி வருகிறது.

இந்நிலையில் கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள காரவள்ளி, கீழ் செங்காடு பகுதிகளில் தொடர்ந்து காட்டுத்தீ பற்றி எரிகிறது. தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காட்டுத்தீயால் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட தென்னை, மா, வாழை, மஞ்சள், பாக்கு மரங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.



காட்டுத்தீ பரவி வருவதால் கொல்லிமலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் கொல்லிமலைக்கு வரவேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். #ForestFire #KolliHillsFire
Tags:    

Similar News