செய்திகள்
கடலூர் அருகே அமமுக நிர்வாகியின் உறவினரிடம் ரூ.4 லட்சம் பறிமுதல்
கடலூர் அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகியின் தம்பியிடம் இருந்து ரூ.4 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
கடலூர்:
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்ததை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதி அமலில் உள்ளது.
இதன் காரணமாக கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் தலைமையில் 27 பறக்கும் படை குழுவும், 27 தேர்தல் விதிமுறைகள் கண்காணிப்பு குழுக்கள், 9 வீடியோ கிராபர்கள் மற்றும் போலீசார் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி பணமோ, நகையோ அல்லது பொருட்களை எடுத்துச் சென்றால் அதற்கான உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே எடுத்துச் செல்லும் நபர்களிடம் ஒப்படைக்கப்படும்.
உரிய ஆவணம் செலுத்தாவிட்டால் அவர்கள் முறைப்படி ஆவணங்கள் காண்பித்து அதன் பிறகு தங்கள் பணமோ அல்லது பொருட்களை வாங்கி செல்லலாம்.
இந்த நிலையில் கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பச்சையாங்குப்பம் என்ற பகுதியில் தாசில்தார் சிவா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனையிட்டனர்.
காரில் இருந்த பணத்தை பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது 4 லட்ச ரூபாய் இருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த பணத்தை எடுத்து வந்த நபர் யார்? என்று விசாரணை செய்தனர். அவர் கடலூர் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் பாலமுருகனின் தம்பி முருகன் என்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், காட்டுமன்னார்கோவிலில் இருந்து கடலூருக்கு வந்தாகவும், இந்த பணம் காண்டிராக்ட் தொழிலுக்கு கொண்டு செல்வதாகவும் கூறினார். ஆனால் இதற்கான ஆவணங்கள் எதுவும் அவர் காண்பிக்கவில்லை. மேலும் இதனை தொடர்ந்து இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்ததை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதி அமலில் உள்ளது.
இதன் காரணமாக கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் தலைமையில் 27 பறக்கும் படை குழுவும், 27 தேர்தல் விதிமுறைகள் கண்காணிப்பு குழுக்கள், 9 வீடியோ கிராபர்கள் மற்றும் போலீசார் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி பணமோ, நகையோ அல்லது பொருட்களை எடுத்துச் சென்றால் அதற்கான உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே எடுத்துச் செல்லும் நபர்களிடம் ஒப்படைக்கப்படும்.
உரிய ஆவணம் செலுத்தாவிட்டால் அவர்கள் முறைப்படி ஆவணங்கள் காண்பித்து அதன் பிறகு தங்கள் பணமோ அல்லது பொருட்களை வாங்கி செல்லலாம்.
இந்த நிலையில் கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பச்சையாங்குப்பம் என்ற பகுதியில் தாசில்தார் சிவா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனையிட்டனர்.
காரில் இருந்த பணத்தை பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது 4 லட்ச ரூபாய் இருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த பணத்தை எடுத்து வந்த நபர் யார்? என்று விசாரணை செய்தனர். அவர் கடலூர் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் பாலமுருகனின் தம்பி முருகன் என்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், காட்டுமன்னார்கோவிலில் இருந்து கடலூருக்கு வந்தாகவும், இந்த பணம் காண்டிராக்ட் தொழிலுக்கு கொண்டு செல்வதாகவும் கூறினார். ஆனால் இதற்கான ஆவணங்கள் எதுவும் அவர் காண்பிக்கவில்லை. மேலும் இதனை தொடர்ந்து இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.