செய்திகள்

18 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுகவினர் 13-ந்தேதி விருப்ப மனு அளிக்கலாம்

Published On 2019-03-11 09:28 GMT   |   Update On 2019-03-11 09:28 GMT
18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 13-ந்தேதி விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #ADMK
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 13-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களை பெறலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.25 ஆயிரத்தை தலைமைக் கழகத்தில் செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அன்று மாலைக்குள் வழங்க வேண்டும். திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு ஏற்கனவே விருப்ப மனு பெறப்பட்டு விட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK
Tags:    

Similar News