செய்திகள்
வேதாரண்யம் அருகே கடலில் மிதந்து வந்த கப்பலுக்கு திசைகாட்டும் கருவியால் பரபரப்பு
வேதாரண்யம் அருகே கடலில் கப்பலுக்கு திசை காட்டும் கருவி ஒனேறு மிதந்து வந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தல் மற்றும் இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு தங்கம் கடத்தல் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க கடலோர காவல் படை மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வேதாரண்யம் அருகே கடலில் கப்பலுக்கு திசை காட்டும் கருவி மிதந்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-
வேதாரண்யத்தை அடுத்த வேட்டைகாரனிருப்பு அருகே வடிகால் ஆறு சங்கமிக்கும் இடத்தில் சுமார் 25 மீட்டர் தூரத்தில் கப்பலுக்கு திசைகாட்டும் போயா எனும் கருவி இன்று மிதந்து வந்தது.
இந்த கருவி எந்த கப்பலுக்கு திசை காட்டுவதற்காக கடலில் போடப்பட்டது? என்பது தெரியவில்லை அது கடத்தல் காரர்களுக்கு சொந்தமானதா? என்பது குறித்து கடலோர காவல்படை மற்றும் வேட்டைக்காரனிருப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தல் மற்றும் இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு தங்கம் கடத்தல் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க கடலோர காவல் படை மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வேதாரண்யம் அருகே கடலில் கப்பலுக்கு திசை காட்டும் கருவி மிதந்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-
வேதாரண்யத்தை அடுத்த வேட்டைகாரனிருப்பு அருகே வடிகால் ஆறு சங்கமிக்கும் இடத்தில் சுமார் 25 மீட்டர் தூரத்தில் கப்பலுக்கு திசைகாட்டும் போயா எனும் கருவி இன்று மிதந்து வந்தது.
இந்த கருவி எந்த கப்பலுக்கு திசை காட்டுவதற்காக கடலில் போடப்பட்டது? என்பது தெரியவில்லை அது கடத்தல் காரர்களுக்கு சொந்தமானதா? என்பது குறித்து கடலோர காவல்படை மற்றும் வேட்டைக்காரனிருப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews